
2010 இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது
மதுரை மாவட்டத்தில், வருடாந்திர ஜல்லிக்கட்டு இந்த வருடமும் கோலாகலமாக
நடத்தப்படவுள்ளது. இதையொட்டி மாடுபிடி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சகாயம் கலந்து கொண்டு பேசுகையில்,
அப்போது சகாயம் பேசியதாவது,
தமிழக அரசு உத்தரவு, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு நடத்தப்பட உள்ளது. வருகிற 15-ந் தேதி அவனியாபுரம், 16-ந் தேதி பாலமேடு, 17ந் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டை போல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறு விதிமீறல் கூட இல்லாமல் காளைகளுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் மரபு மற்றும் கலாச்சார விழாவான இந்த ஜல்லிகட்டை தொடர்ந்து நடத்த தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாடுபிடி வீரர்கள் பிராணிகளை சிறு அளவிலும் வதை செய்யாமல் இருத்தல் வேண்டும். காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுவதோ, ஏதேனும் உபகரணத்தை கொண்டு தாக்குவதோ, காயப்படுத்துவதோ கூடாது.
கும்பலாக வந்து காளைகளை பிடிக்க கூடாது. குறிப்பாக இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய நிலையில் இதில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளுக்கு சிறு தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
வீரர்கள் அனைவரும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் காளைகளை கடைசி நேரத்தில் பதிவு செய்வதை விட இப்போதே பதிவு செய்தால் வசதியாக இருக்கும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் மாடுகளை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது சகாயம் பேசியதாவது,
தமிழக அரசு உத்தரவு, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு நடத்தப்பட உள்ளது. வருகிற 15-ந் தேதி அவனியாபுரம், 16-ந் தேதி பாலமேடு, 17ந் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டை போல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறு விதிமீறல் கூட இல்லாமல் காளைகளுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் மரபு மற்றும் கலாச்சார விழாவான இந்த ஜல்லிகட்டை தொடர்ந்து நடத்த தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாடுபிடி வீரர்கள் பிராணிகளை சிறு அளவிலும் வதை செய்யாமல் இருத்தல் வேண்டும். காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுவதோ, ஏதேனும் உபகரணத்தை கொண்டு தாக்குவதோ, காயப்படுத்துவதோ கூடாது.
கும்பலாக வந்து காளைகளை பிடிக்க கூடாது. குறிப்பாக இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய நிலையில் இதில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளுக்கு சிறு தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
வீரர்கள் அனைவரும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் காளைகளை கடைசி நேரத்தில் பதிவு செய்வதை விட இப்போதே பதிவு செய்தால் வசதியாக இருக்கும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் மாடுகளை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக